வியாழன், 31 ஜூலை, 2014


                          இரங்கல் 

NFTE மாவட்ட சங்கத்தின் முன்னாள் 

பொருளாளர்  தோழர்   திரு M  மஞ்சினி  TM /CDL 

 அவர்களின் தாயார்   நேற்று (29-07-2014)   

 காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 

பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு 

மாவட்டச் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை 

உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் புதுவை பெரிய காலாப்பட்டு 

அருகில் மாத்தூர் கிராமத்தில்     இன்று (30-07-2014) 

மாலை   நடைபெறும் .

புதன், 30 ஜூலை, 2014

 இந்தியாவில் எப்போது?


உலகெங்கும் பெரும்பாலான அரசுகள் முதலாளிகள் நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும்போதுதொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு சமீபத்தில் ஒரு முடிவை எடுத்திருக்கிறது ஜெர்மனி. 

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்வரும் ஜனவரி முதல் மணிக்கு 8.5 யூரோக்களாக (சுமார் ரூ.700) இருக்கும் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. மணி நேரம் வேலை செய்தால் சுமார் ரூ.5,600. ஒரு மாத ஊதியம் சுமார் ரூ.1.5 லட்சம்.

ஜெர்மனி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வறுமை நிலையைக் கணக்கில் கொண்டுஅவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு.

பிரிட்டனிலும் 1998 முதல்குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமலில் இருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களிலும் சமூகநலத் திட்டங்களிலும் ஜனநாயக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியான பிரிட்டனும் குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துவது அவசியம் என்று கருதுகிறது. பிரான்ஸும் ஐரோப்பா முழுமைக்கும் பொதுவான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பதை இத்தாலிநார்வேசுவீடன் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளும் உணர்ந்துள்ளன. 

அமெரிக்காவிலும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அதிபர் ஒபாமா முயற்சி மேற்கொண்டார். ஆனால்நாடாளுமன்றம் அதைத் தடுத்துவிட்டது.

வளர்ந்த நாடுகளிலாவது தொழிற்சங்கங்கள் வலிமையுடன் உள்ளன. அந்த நாடுகளிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஊதிய உயர்வின் அவசியத்தை உணர்ந்துள்ளன. 

வளரும் நாடுகளில் தொழிற்சங்கங்கள் வலிமையாக இல்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாமல்வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் வேலை செய்கின்றனர். சட்டங்கள் பல இருந்தும் அவற்றை முறையாக அமல்படுத்திதொழிலாளர் நலனைக் காப்பதில் வளரும் நாடுகளின் அரசுகள் முயற்சி எடுப்பதில்லை.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதால் வேலைவாய்ப்பு பெருகும்பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை அரசுகளும்செல்வாக்குள்ள முதலாளிகளும் ஏற்றுக்கொள்வதேயில்லை. இதனால்உற்பத்திச் செலவு கூடும்,லாபம் குறையும் என்றே வாதிடுகிறார்கள். அது உண்மையல்ல. தொழிலாளர்கள் வெறும் தொழிலாளர்கள் மட்டும் இல்லை,அவர்கள்தான் பிரதானமான நுகர்வோர்கள். தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் முழுக்க மீண்டும் செலவிடப்பட்டு,பொருளாதாரத்தை வளர்ச்சியடையவே செய்கிறது. அவர்கள் செய்யக்கூடிய முதலீடும் சமூகத்துக்கே பயன்படுகிறது.

அரசுப் பணிகள்தகவல் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகளில் பணிபுரிபவர்களைவிட அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அப்படிப்பட்ட தொழிலாளர்களை வெகு காலமாகப் புறக்கணித்துக்கொண்டிருக்க முடியாதுசமூகத்தில் இரண்டு தரப்புகளுக்கும் இடையே ஏற்கெனவே காணப்படும் பிளவு மேலும் மோசமாகிவிடும். ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதுதான் வளர்ச்சியின் முதல் படியாக இருக்குமே தவிரசந்தையையும் பொருளாதாரத்தையும் வரம்பில்லாமல் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதல்ல என்பதை உணர்ந்து அரசுகள் செயல்பட வேண்டும்.

வியாழன், 24 ஜூலை, 2014

               

                       




BSNL நிறுவன சீரமைப்பு “M/s Deloittee Consultants” பரிந்துரை...

RECOMMENDATIONS OF "DELOITTEE"Consultants

BSNL நிறுவன சீரமைப்பு (ORGANISATIONAL RESTRUCTURING) மற்றும்
மனித வளத்திட்டத்தின்(HR PLAN) மீதான
“M/s Deloittee Consultants” பரிந்துரைகளின் சாராம்சம்

விற்பனையையும் வாடிக்கையாளர் சேவையையும்
முன்னிலைப்படுத்தும் நோக்கில்
SSAக்களை பகுதிவாரி அலுவலகங்களாக (AREA OFFICES)
சீரமைக்க வேண்டும்.
பூகோள அளவுதொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கை
மற்றும் வருமான வாய்ப்பு அடிப்படையில்
சிறிய SSAக்களை பகுதி வாரி அலுவலகங்களுடன் இணைக்க வேண்டும்.
இதன் படி தற்போது அகில இந்திய அளவில் இருக்கும்
329 SSAக்களை 167 பகுதி அலுவலகங்களாக
மாற்றியமைக்க வேண்டும்.
தமிழகத்தில் இருக்கும் 17 SSAக்கள்
10 பகுதி அலுவலகங்களாக மாற்றி அமைக்கப் பட வேண்டும்.
விருதுநகர்மதுரையுடனும்
தஞ்சை மற்றும் குடந்தைதிருச்சியுடனும்
ஈரோடுகோவையுடனும்
தர்மபுரி மற்றும் நாகர் கோவில்வேலூருடனும்
இணைக்கப் பட வேண்டும்.
Transmission, Network Planning போன்ற வேலைகளை
மாநில அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும்.

விற்பனை(SALES),
சந்தைப்படுத்துதல்(MARKETING),
வாடிக்கையாளர் சேவை(CUSTOMER SERVICE DELIVERY),
தகவல் தொழில்நுட்பம்(IT) போன்ற முக்கியமான பகுதிகளில்
BSNL பின் தங்கியுள்ளது.
அந்த துறைகளில் திறனை அதிகரிப்பதற்காக,
தொலைத்தொடர்பு விற்பனை பின்புலத்திறன் கொண்ட
8000 அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு சந்தைப்படுத்துதல் பின்புலத்திறன் கொண்ட
1300 அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர் மேலாண்மையில் திறன் கொண்ட
4000 அதிகாரிகளை பணி நியமனம் செய்ய வேண்டும்.
அப்படி நியமிக்கப்படும் ஊழியர்களில் பெரும்பகுதியினர்
நிறுவனத்தின் ஊதியப் பட்டியலில்
ஊதியம் வாங்குபவராக இருக்கக் கூடாது.

வருமானத்திற்கும் ஊழியர் ஊதியத்திற்கும் உள்ள விகிதாச்சாரம்
51% என்ற அதிக அளவில் உள்ளது.
போட்டி நிறைந்த இன்றைய சூழலில் 
இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சந்தை மதிப்பீட்டில் கண்டறியப்படும் உபரி ஊழியர்களின் ஊதியத்தில்  50%த்தைஅரசு ஏற்க வேண்டும்.
செயல்திறன் நிர்வாகத் திட்டத்தை(PERFORMANCE MANAGEMENT SYSTEM)அறிமுகப்படுத்தி ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

பகுதி அலுவலகங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஊழியர் எண்ணிக்கை
ஒரு பொது மேலாளருக்கு 2 துணைப்பொது மேலாளர்கள்
2705 தரைவழி இணைப்புகளுக்கு ஒரு JTO/SDE/AGM
விற்பனைசந்தைப்பிரிவுவாடிக்கையாளர் சேவைப்பிரிவுகளுக்கு
சந்தையில் உள்ள நிலவரப்படி ஊழியர் எண்ணிக்கையை முடிவு செய்யலாம்.
பகுதி அலுவலகங்களில் உள்ள மொத்த ஊழியர் எண்ணிக்கையில்
20% நிதி/கணக்குப் பிரிவு ஊழியர்கள்.
7% மனித வள நிர்வாகப் பிரிவு ஊழியர்கள்.
409 இணைப்புகளுக்கு ஒரு TM/RM
2991 தரைவழி இணைப்புகளுக்கு ஒரு TTA
தற்போது இருக்கும் Sr.TOAக்கள்
ERP நடைமுறைப்படுத்தப்படும் வரை தொடரலாம்.
மற்ற பிரிவு NON EXECUTIVE ஊழியர்கள் தேவையில்லை;
அவர்கள் ஓய்வு பெறும் வரை தொடரலாம்.

தற்போது தொழில்நுட்பம், நிதி ஆகிய இரு பிரிவுகளில் மட்டுமே
நிர்வாகிகள் இருக்கிறார்கள்.
இது போதாது.
மாறி வரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப
விற்பனை, சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை விநியோகம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பகுதிகளில்
புதிய திறனைப் புகுத்த வேண்டும்.
பொறியியல் பட்டத்தோடு மேலாண்மைப் பட்டமும் பெற்று
விற்பனை, சந்தைப்படுத்துதலில் அனுபவம் பெற்ற
14234 புதிய நிர்வாகிகளை
JTO/SDE/AGM/DGM/GM பதவிகளுக்கு நியமனம் செய்ய வேண்டும்.
இதில் DGM/GM பதவிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் மட்டும் நிறுவனத்திலிருந்து ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.
மற்றவர்கள் நிறுவன ஊழியர்களாக இல்லாது
OFF ROLL ஊதியம் பெறுபவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ் மாநிலத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட
நிர்வாகிகள் எண்ணிக்கை(EXECUTIVES STRENGTH)
DESIGNATION
EXISTING
RECOMMENDED
CGM/PGM
1
4
GM/Sr.GM
24
29
DGM
107
90
JTO/SDE/AGM/CAO
3527
2589
TOTAL
3659
2712
 

தோழர்களே,
சாம் பிட்ரோடாவில் இருந்து Deloittee வரை
எத்தனை குழுக்கள் மதிப்பீடு செய்தாலும்
அவை அனைத்தின் சாராம்சம் ஒன்று தான்.
“ஊழியர் ஊதியச் செலவு அதிகம்,
ஏனென்றால், தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருக்கிறார்கள்”,
என்பது தான்.

நிறுவனத்தின் நிலையை சீரமைக்க வேண்டும் என்றால்,
ஊழியர்களின் வாழ்வைச் சீரழிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளையே தொடர்ந்து பார்த்து வருகின்றோம்.
போட்டி என்ற பெயரில்
சுரண்டல் முறைகளை ஊக்குவிக்கும் பரிந்துரைகளையே
கேட்டு வருகிறோம்.

ஏனென்றால்,
பரிந்துரைக்காக நியமிக்கப்பட்ட அத்தனை மதிப்பீட்டாளர்களும்
முதலாளித்துவ கார்ப்பொரேட் நிறுவனங்களும்
அதன் பிரதிநிதிகளுமே ஆவர்.
  
BSNL நிறுவனமும்
தொழிற்சங்கங்களிடம் தகவல் இருட்டடிப்பு வேலையைத்
தொடர்ந்து கடைப்பிடிக்கிறது.
பரிந்துரைக்காக இப்படி ஒரு நிறுவனத்தை நியமிக்கப் போவது தொடர்பாக
எந்த சங்கத்திடமும் ஆலோசிக்கவில்லை. அறிவிப்பு கூட இல்லை.
வந்த பரிந்துரையை எந்தச் சங்கத்திற்கும் வழங்கவில்லை,
அதுபற்றி ஆலோசிக்க அழைக்கவில்லை.
ஆனால், நிர்வாக ரீதியாக பொதுமேலாளர்கள் மட்டத்தில்
இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வதற்கு துவங்கி விட்டது.

திங்கள், 21 ஜூலை, 2014

             


டெலாய்ட்டி திட்டம்  சீரமைப்புத் திட்டமா ?  

             ஆட்கொல்லி சீரழிவுத் திட்டமா ?

 BSNL நிறுவனத்திற்கு புத்துயிர் ஊட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு  டெலாட்டி கன்சல்ட்டண்ட் 
Deloittee consultant) என்ற நிறுவனத்திடம் பரிந்துரையை கேட்டிருந்தது 
BSNL  நிர்வாகம்.

ஆகஸ்ட் 12, 13 தேதிகளில்  அனைத்து மாநில உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. டெலாய்ட்டி அறிக்கையின் முக்கிய  பகுதிகளை அந்த அதிகாரிகளுக்கு வெளியிட்டு, அதை தங்களது  மாநிலத்தில் அமலாக்குவது பற்றிய கருத்துக்களோடு வருமாறு 
BSNL கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து  CGMகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது. 

 அதன் முக்கிய அம்சங்கள் :

1. தலமட்ட நிர்வாக அமைப்பு SSA அளவில் என்பதை மாற்றி ஏரியா 
   அளவில் அமைப்பது.

2. சிறு SSAக்களை பெரிய SSAக்களுடன் இணைத்து ஒருங்கிணைப்பது.

3. இந்தியா முழுவதும் தற்போது 329 SSAக்கள் உள்ளன. அவற்றை 
    167ஆக குறைப்பது.

உதாரணத்திற்கு :

 தமிழ் மாநிலத்தில் 17 SSAகளுக்கு பதிலாக 10 ஏரியா அலுவலகங்கள் மட்டும் இருக்கும்.

தஞ்சாவூர், கும்பகோணம், தர்மபுரி, விருது நகர், நாகர்கோவில் ஈரோடு ஆகியவற்றில் ஏரியா அலுவலகம் கிடையாது. 

காரைக்குடி, நீலகிரி மாவட்டம் பற்றி குறிப்பு ஏதும் கிடையாது. 

தவறுதலாக தெலுங்கானவில் உள்ள கரீம் நகர்  தமிழ் மாநில  SSAவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

   


4. ஏரியா அலுவலகங்கள் , மார்க்டெட்டிங், விற்பனை, விற்பனைக்கு 
   பிறகு சந்தாதாரர்களுக்கு சேவை செய்யும் பணி, தனியாருக்கு
  விடப்பட்ட பணிகளை மேற்பார்வை இடுவது  ஆகியவற்றில் முழு
   கவனம் செலுத்த வேண்டும்

5. டெகினிகல் பணிகளான திட்டமிடல், ட்ரான்ஸ்மிஷன் போன்ற      
   பணிகளை மாநில அலுவலகம்   செய்யவேண்டும்,

6. ERP  திட்டம் அமலான பிறகு  ஊழியர்கள் , நிதி  சம்பந்தப்பட்ட பணிகளை   மாநில அலுவலகம்   செய்ய வேண்டும் 

7. விற்பனை, மார்கெட்டிங், IT உயர் தொழில் நுட்பம் ஆகிய குதிகளில் 
    மிகத்தேவையான கூடுதல் திறமைகளை மேம்படுத்துவது.

8. தனியார் துறைகளில் அதிகாரிகள் அல்லாதோர்   இல்லை !
  (No Non Executives) என்ற நிலை நிலவுகிறது. 

(அவர்கள் செய்யும் அனைத்து பணிகளும் ஒப்பந்த ஊழியர்களால் செய்யப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை)  

ஆகவே, புதியதாக முழு ஊழியரல்லாத  ( நிரந்தமில்லா) அதிகாரிகளை கீழ்க்கண்ட எண்ணிக்கையில் நியமிப்பது.    (On Off Role basis)    
   
                                                       சேல்ஸ்               :     8000+  
                                                     மார்க்கெட்டிங்   :    1300+  
       விற்பனைக்கு பிறகு சேவை வழங்க  :    4000+  


9. JTO- SDE-AGM அதிகாரிகள் ஒரே குரூப்பாக கருதப்பட்டு , பதவி உயர்வு
    காலி இடங்களின் அடிப்படையில் அல்லாமல், திறமையானவர்களுக்கு
   அடுத்த நிலைக்கு பதவி உயர்வு என்ற முறையை கையாள வேண்டும்.

10. STR போன்ற  Mtce பணிகளை வெளியார் பணிக்கு விட வேண்டும். 
     அதை மாநில நிர்வாகம்    கண்காணிக்க வேண்டும்.

11. பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும்  வரையிலும் ERP திட்டம் முழுமையாக அமலாகும் வரையிலும் ஊழியர்களின் பணி செயல்பாட்டை  அதிகப்படுத்துவது,  அவர்களின்  தனிப்பட்ட
செயலாக்கத்தின் அடிப்படையில் தரம் பிரிப்பதன் மூலம்.

12. செயலாக்கத்தின் அடிப்படையில் பணிக் கலாச்சாரத்தை மேம்படுத்துவது.

13. சரிபாதி ஊழியர்கள் உபரி என்ற அடிப்படியில் அவர்களுக்கான
      ஊதிய செலவை அரசிடமிருந்து  உதவியாக பெறுவது.

14. கேரள மாநிலத்தில்  ற்போது உள்ள அளவீடுகளின் அடிப்படையில் தேவையான ஊழியர்களை கணக்கீடு    செய்வது.

  உதாரணத்திற்கு, தமிழ் மாநிலத்தில் தேவையான ஊழியர்கள் 

                   தமிழ் மாநில அலுவலகம் :


                                                      T.Mech & RM    =     34
                                                                TTA            =     16
                                                            Sr.TOA          =      60
                                                                                       --------
                                                மொத்தம்   =               110  
                                                                                      ---------


                                                                                      
                        தமிழ் மாநில அனைத்து SSAகளுக்கும் :

                                             T.Mech  & RM    =    3832
                                                        TTA           =      524
                                                 Sr.TOAP          =      675
                                                                                 --------
                                         மொத்தம்             =    5031 
                                                                                --------

மீதியுள்ள ஊழியர்கள் அளவீட்டிற்கு உட்படாத உபரி ஊழியர்களாக (supernumerary posts) கருதப்படுவார்கள்.





  மார்கெட்டிங், விற்பனை, விற்பனைக்கு பிறகு அதை பராமரிக்க 
மன நிறைவான உடனடி சேவை ஆகியவற்றில் கூடுதல் கவனம்
செலுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க 
முடியாது.

அதற்காக,
* 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைத் தொடர்பு சேவையையே 
தனது உயிர் மூச்சாக கருதி, இதை நிர்மாணிப்பதில், சேவையை விரிவாக்குவதில் அளப்பரிய பணியாற்றிய 50 சத ஊழியர்களை
உபரியாக,  உதவாக்கரையாக அறிவித்திட வேண்டும் என்றும் 

MBA MCA படித்துவிட்டு  தனது கல்வித் திறமைக்கு ஏற்ற பணி கிடைக்காததால் தனியார் துறையின் கடும் சுரண்டலுக்கு 
ஆளாகும் இளைஞர்களை, BSNLம் அதேபோல சுரண்ட வேண்டும் 
என்ற மனித நேயமற்ற அடிப்படையில் அமைந்துள்ள  டெலாய்ட்டின் அறிக்கை கண்டனத்திற்குரியது.