வியாழன், 28 ஏப்ரல், 2016

Big Labour Reforms: Minimum Wage Will Soon Increase to Rs 10,000 p.m

RBI MOney
Indian unskilled and skilled workers will soon experience one of the biggest labour reforms ever finalized. In a big relief to all contractual employees, minimum wage has been increased by more than 50% to Rs 10,000 per month or Rs 333 per day.
Right now, minimum wage rule in India varies as per various states, and as per Payscale, Rs 211 per day or Rs 6330 per month is the minimum wage in India (as per Central Govt.’s notifications).
Union Minister of State for Labour and Employment Bandaru Dattatreya said, “It is the endeavour of the Central government to make reforms in labour laws and to proceed from minimum wage to universal wage.”, adding, “In view of the apex court order, we are enhancing it first to Rs 10,000 and then we want to go for universal minimum wage,”
However, as per the Minister, opposition parties are not allowing normal functioning of Parliament, due to which this major reform is not being passed. Hence, Govt. will issue an executive order regarding this increase of minimum wage very soon.
Minister said, “Because the Parliament is not functioning properly, we don’t want to wait and we want to go ahead with some executive orders for the welfare of the workers,”
As per available reports, Govt. will induce a change in the Rule 25 of the Contract Labour (Regulation and Abolition) Central Rules; thereby enabling the Centre to impose the minimum wage of Rs 10,000 for all contractual employees.
It is not yet clear regarding the proportion of increase, as unskilled laborers have different minimum wage, compared to skilled and semi-skilled laborers. Once the amendments are complete in the Contract Labour (Regulation and Abolition) Central Rules, we will have a clear picture.
The proposal to increase minimum wage has been sent to the Law Ministry for approval, and the official notification would be announced based on that.
The decision to increase minimum wage was taken after observing the current Consumer Price Index and various variations pertaining to dearness allowance.

Rs 10,000 Is Enough to Survive?

Last year, 10 central trade unions had striked for a day, to let the Govt. know about the need to change minimum wage.These trade unions, representing 15 crore employees, had demanded a minimum wage of Rs 15,000 per month, and asked the Govt. to make it uniform across the country. During that time, Govt. had proposed a minimum wage of Rs 7098 per month, which was not implemented.
Different states have different minimum wages, which increases the gap and creates more inequality. For example, minimum wage in Maharashtra (for unskilled workers) is Rs 5988; whereas its Rs 5683 in Bihar and Rs 9178 in Delhi.
Here is a list of minimum wages for every country.
We will keep you updated as more details come in
BSNLEU போல ஆமாம் சாமி சங்கமல்ல !  
               ஆர்பரித்த சங்கம்  NFTE !!

நமது துறை நிறுவனமாக மாற்றப்படும் என்று வாஜ்பாய் அரசு 
அறிவித்தவுடன் ஊழியர் நலன் காக்க 2000, செப்டம்பர் 6 முதல் 9 
வரை உக்கிரமான வேலை நிறுத்த போராட்டம் மூலம் நாட்டையே
ஸ்தம்பிக்க வைத்து,  மத்திய அரசை நிர்பந்தித்து அரசு பென்சன், 
வேலை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்க வைத்து  
அனைத்து ஊழியரையும் நெஞ்சு நிமிர BSNLக்கு  Option கொடுக்க 
வைத்த பெருமைமிகு சங்கம் NFTE.

அப்போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், காட்டிக் கொடுத்து  
BSNL தொழிற்சங்க வரலாற்றில்  கரும்புள்ளிக்கு ஆளானது  
நம்பூதிரி, அபிமன்யூ தலைமை.    

நிறுவனம் துவங்கும்முன் அதை அனுமதியோம் என்று வெற்று 
கோஷமிட்ட  நம்பூதிரி,  BSNL நிறுவனம் துவங்கிய நாளன்று முதல் வரிசையில் அமர்ந்து வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டு
இருந்ததும் வரலாறு.

தனது கட்சிக்கென்று தனிக் கடை துவங்க சரியான நேரம் என்று முதன்முதலாக   BSNL பெயரில் சங்கம் துவக்கியவர்  நம்பூதிரி..

 BSNLக்கு Optionஐ முந்திக் கொண்டு கொடுத்ததும் அவர்களே !.

பென்சன் நாயகன் தோழர் குப்தாஅவர்கள் காலமான அன்றுதான் 
நம்பூதிரி தன் உள்ளத்தில் இருந்த உண்மையை கீழ்க்கண்டவாறு 
எழுதினார்.

(NFTE, FNTO, BTEF )மூன்று சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் 
கடும் எதிர்ப்பையும் புறந்தள்ளி மத்திய அரசு BSNL நிறுவனத்தை 
1-10-2000 அன்று உருவாக்கியது. BSNLக்கு விருப்பம் தரும் (option)  
ஊழியர்களுக்கு  அரசு பென்சன் வழங்கப்படும், DOTல் பணியாற்றிய  ஆயிரக்கணக்கான கேசுவல் ஊழியர்கள் நிரந்தரப் படுத்தப்படுவார்கள் என்று அரசுக்கும் மூன்று சம்மேளனங்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாடு உருவாவதில் தோழர் குப்தா அவர்களின் பங்கு மகத்தானது. 


From : vannamboodiri.com dated 3-2-2013


                                 VAN Namboodiri's Blog


                   BSNL formed

Despite strong protest and strike actions by the Federations and Unions in DOT, 

the government formed the new telecom corporation, Bharat Sanchar Nigam 
Limited (BSNL). It came in to being on 1st October 2000. An agreement was 
made by the three federations with the government ensuring govt. pension for 
the BSNL absorbed employees as also regularisation of thousands of casual 
labour engaged in DOT. Com.OPG played a dominant role in reaching this 
agreement.

காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.
உடனே பத்திரிகையாளர்கள் , துண்டை மாற்றி போட்டுள்ளீர்கள் எதுவும் விஷேசமா? என்று கேட்டுள்ளனர்.
காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.
பத்திரிகையாளர்களோ அவரை விடவில்லை. துண்டு மாற்றி போட்டதற்கு காரணம் என்ன? என்று துளைக்க ஆரம்பித்துள்ளனர்.
உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா , "இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்" என்றாராம் ,
வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம். Pin drop silence....
அதைக்கண்ட பத்திரிக்கையாளர்கள் அனைவரும் தலைகவிழ்ந்தனர்.
இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். ".
மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள். நாம் அமைதி காப்போம்" இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறியது!!
இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக்கு வரும்?

BSNLEUவின் டவர் கம்பெனி  எதிர்ப்பு  


என்பது எதுவரை !   அது வரும் வரை


BSNLEUவின் டவர் கம்பெனி எதிர்ப்பு
என்பது எதுவரை ! அது வரும் வரை !
காதல் என்பது எது வரை ! கல்யாண காலம் வரும்வரை !!
என்பது ஒரு பிரபலமான திரைப்பட பாடல்.
அது போலத்தான் BSNLEUதலைவர்களின் எதிர்ப்பு நாடகம்
என்பதை அவர்களின் கடந்த கால வரலாறு நிரூபிக்கிறது.
OTBP/BCR திட்டம் தவறு ! தொழிலாளி வர்க்க துரோகம்
என்று அன்று நீட்டி முழக்கினார்கள் !! அது அமலான ஒரு
சில மாதங்களிலேயே அந்த திட்டத்தை RMS பகுதி ஓட்டுனர் கேடருக்கும் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் !
நவீனமயம் தேசத் துரோகம்! கம்ப்யூட்டர் வந்தால் அதோகதி ! அம்போ ! என்று அன்று ஊழியர்களை அச்சுறுத்தினார்கள் !
இன்று அந்த சங்கத்தினர்தான் அதை பயன்படுத்துவதில்
முதலிடத்தில் உள்ளனர் !!
கேடர் சீரமைப்பு ! கேடர் சீரழிவு !! என்று அன்று ஓலமிட்டனர் !! அத்திட்டம் வந்தவுடன் ஓலமிட்டவர்கள்தான் ஓடோடிச் சென்று
தேர்வு எழுதி TM, TTA, JTO, SDE என பதவி உயர்வு பெற்றனர்.
2004ல் அங்கீகாரம் பெற்றவுடன் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் ! என்று நாடெங்கும் கன்வென்ஷன் நடத்தினர். அனைத்து சங்கங்களும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த பின்னும் 4-1-2006 அன்று அரசிடம் சரணடைந்து 5-1-2006 திட்டமிட்ட வேலை நிறுத்த போராட்டத்தை
வாபஸ் பெற்றார் நம்பூதிரி.
அதன் பிறகுதான் நமது துறையில் BSNLஐ பின்னுக்கு தள்ளி , தனியார் கம்பெனிகள் கோலோச்ச துவங்கின.
BBNL கம்பெனி துவங்கி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன,
அதைப் பற்றி வாயே திறக்காத சங்கம்தான் BSNLEU.
தற்போதும் டவர் கம்பெனி துவங்க மத்திய அமைச்சரை
முடிவெடுத்து பல மாதங்களாகி விட்டது. அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டதுதான் உண்மை.
ஆகவேதான்,நமது எதிர்ப்பையும் மீறி டவர் கம்பெனி துவங்கப்பட்டால் ஊழியர்களின் பென்சன் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து விவாதிக்க வேண்டும் என்று நமது சங்கம் சரியான நிலைபாடு எடுத்து உள்ளது.
இதனையும் குதர்க்கமாக திரித்து வெளியிடும்
BSNLEU வின் பொய்ப் பிரச்சாரம் ஊழியர்களிடம் எடுபடாது.
டவர் கம்பெனி துவங்கியவுடன் அதற்கென தனது பெயரில்
புதிய சங்கம் துவங்கவும் தயங்காது BSNLEU என்பதுதான்
உண்மை.
Aug 06, 2015, 09.20 AM | Source: CNBC-TV18 Cabinet approves hiving off BSNL towers into new company The Union Cabinet today approved hiving off 65,000 towers of state-run telecoms firm BSNL into a new company. The move is expected to help the company realize the full valuation potential of the towers.

சனி, 2 ஏப்ரல், 2016

தேர்தல் நேரம் இது!




BSNLEU பொது செயலர் அபிமன்யு கடந்த ஆறு வருடங்களாக மௌனம் காத்துவிட்டு நிர்வாகம் இலாகா நஷ்டத்தில் இருப்பதால் போனஸ் கொடுக்க முடியாது என்று கூறியபோது வாய்மூடி இருந்தார். 

பொதுத்துறை நிறுவனங்களை கட்டுபடுத்தும் Department of 
Public Enterprises(DPE)  2011 இலாபம் என்பது போனசோடு தொடர்பு உடையது அல்ல என்று கூறியும் போனஸ் 
கொடுக்க மனமில்லாமல் நிர்வாகத்தோடு 2013 வரை
 சுவர் எழுப்பி நின்றவர் தோழர் அபிமன்யு என்பது 
யாவரும் அறிந்ததே!

 NFTE –BSNL ஆறாவது சரிபார்ப்பு தேர்தலில் அங்கீகாரம் பெற்றவுடன்BSNLEU சங்கத்துடன் போட்ட பார்முலாவை மறுபரிசீலனை செய்ய நிர்வாகம் ஒத்துக்க்கொண்டது. 
அதற்கு தலை ஆட்டுவதை தவிர வேறு வழியில்லை 
என்பதை அபிமன்யு உணர்ந்து கொண்டார்.
இதனை எப்படி செயல்படுத்துவது என்பதை தீர்மானிக்க
ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் நமது சங்கத்தின் சார்பாக தோழர் இஸ்லாம் பங்கேற்றார். அதே போல BSNLEU சார்பாக அபிமன்யு பங்கேற்றார். 
அபிமன்யுவின் தொடர்ச்சியான ஒத்துழையாமை 
காரணமாக கமிட்டி பலமுறை கூடவில்லை. இதன் 
காரணமாக போனஸ் பற்றி கடந்த இரண்டு வருடங்களாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை என்பதே உண்மை.
ஆதலால், NFTE –BSNL சங்கம் குறைந்தபட்சம் Adhoc Bonus கொடுக்கப்பட வேண்டும் என நிர்வாகத்தை வலியுறுத்தியது. வேறு வழியின்றி CMD Adhoc Bonus  தர ஒத்துக் கொண்டார். ஆனால் எவ்வளவு தொகை என்பதில் திரும்பவும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டது.

 30-03-16 அன்று கமிட்டி இதை பற்றி விவாதிக்க கூடியது. எப்போதும் போல அபிமன்யு இந்த கூட்டத்திற்கு வராமல் புறகணித்தார். நாடு பூராவும் ஒட்டு சேகரிப்பதுதான் முதல் கடமை எனக் கூறி நழுவினார். ஆனால் நாம் விடவில்லை. நிர்வாகம் குறைந்தபட்ச தொகையை போனஸ் பார்முலா முடிவாகும்வரை ஏற்று கொள்ள வேண்டினர். 

எதுவாக இருப்பினும் போனஸ் கிடையாது இன்ற நிலையில் மாற்றம் வந்திருப்பது பெரிய விஷயமாக நாம்  பார்த்ததும். லாபம் வந்தால் மட்டுமே  போனஸ் என்ற நிலையில் மாற்றம் வந்திருப்பது நல்ல அறிகுறியாக நாம் பார்த்தோம். துரதிஷ்ட்வசமாக நாம் இன்னும் லாபம் என்ற நிலையை அடையவில்லை. அபிமன்யு  Rs.3500க்குறைந்து ஏற்க கூடாது என்று கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். 

ஆனால், கடந்த ஆறு வருடமாக இதற்காக ஏதாவது போராட்டத்தினை அபிமன்யு முன்  எடுத்திருக்கிறாரா? நாம் வாங்கும் சம்பளமே மிகவும் அதிகம்.... போனஸ் கேட்பது அநியாயம்...... என்று நாடெங்கும் பிரசாரம் செய்து வந்தார்.


NFTE   LOW  QUOTATION என்று சொல்லும் BSNLEU 
போனஸ் விவகாரத்தில்  NO  QUOTATION...ஆன  பரிதாபம் என்ன?


ஆறு வருடம் தூங்கி இருந்து விட்டு இன்று போனஸ் பெற வெற்று ஆர்ப்பாட்டம் செய்யும் சங்கத்திற்கு  அனைத்து ஊழியர்களும் 10-05-16 தேர்தலில் சரியான பதில் அளிப்பார்கள்
.
கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இதே புரட்சிபுலி அபிமன்யு போனஸ் இனி யாரும் பெறவே முடியாது என்று கூறியது அனைவருக்கும் இன்னும் ஞாபகத்தில்தான் உள்ளது.

பாடம் புகட்டுவோம் ஊழியர் விரோத BSNLEU சங்கத்திற்கு!
தேர்ந்தெடுப்போம் NFTE-BSNL சங்கத்தை

No comments:
முட்டாள்களாகும் தினம்

ஏப்ரல் ஒன்று.
வழக்கமாக முட்டாள்கள் தினம் என்று சொல்வார்கள்.
ஆனால் தோழர் அபிமன்யூ 2016 ஏபரல் ஒன்றை
பி.எஸ்.என். எல் ஊழியர்களை முட்டாள்களாகும் தினமாக மாற்றியுள்ளார்.
ஆறு வருடங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் பொழுதைக் கழித்து, பொன்னான போனசைப் பறிகொடுத்தது BSNLEU.
லாபமோ நட்டமோ 10000 ரூபாய் போனஸ் உறுதி செய்து சாதனை படைத்து விட்டோம் என்று சொல்லி ஊழியர்களை ஏமாற்றியது BSNLEU.
உற்பத்தியுடன் இணைந்த போனசை லாபத்துடன் கூடிய இன்செண்டிவ் ஆக மாற்றி உடன்பாடு கண்டு துரோகம் இழைத்தது BSNLEU.
உயிரிழந்த போன்சுக்கு மீண்டும் உயிர் கொடுக்க் வைத்த்து NFTE இயக்கம்தானே.
போன்சுக்காக கமிட்டி அமைக்க வைத்தது NFTE இயக்கம்தானே.
2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் போனசுக்காக இயக்கம் நடத்தியது NFTE இயக்கம் மட்டும்தான்.
இனி போனஸ் என்பதை எவராலும் பெற முடியாது என்று சென்னையில் பேசியது அபிமன்யூ அல்லவா?
30.03.2016 போன்ஸ் கமிட்டி கூட்டத்தைப் புறக்கணித்தது யார்?
புறக்கணித்தது மட்டுமல்லாமல் வாக் அவுட் செய்து விட்டோம் என்று வாய் கூசாமல் பொய் சொன்னது யார்?
புறக்கணித்தது மட்டும் அல்லாமல் NFTE இயக்கம் மீது பழி சுமத்தும் தோழர் அபிமன்யூ அவர்களே உண்மை வெளி வரும் போது உங்கள் சாயம் வெளுக்கும்.
போனசே கிடையாது என்று சொன்ன நிர்வாகத்தை போனஸ் தருவோம் என்று சொல்ல வைத்த NFTE இயக்கத்தின்  பெருமையை பொய்களால் குலைக்க முடியாது.
போனஸ் என்பது மீண்டும் கிடைக்கும் என்ற நிலை உருவானதை, சகித்துக் கொள்ள முடியாமல்  ஆர்ப்பாட்டம் அதுவும் ஏப்ரல் ஒன்று  அன்று அறிவித்து ஊழியர்களை முட்டாளாக்கும் முயற்சியை மே 10 அன்று ஊழியர்கள் முறியடிபார்கள்