வியாழன், 20 ஏப்ரல், 2017

நோட்டீஸ் போர்டு சங்கம் அல்ல நமது சங்கம் அகிலஇந்திய முழுதும் பரவிக்கிடக்கும்....

 சம் மேளனம் -NFTCL

notice board க்கான பட முடிவு
ஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி உயர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கான
 VDA விலைவாசிப்படி
01/04/2017 முதல் உயர்ந்துள்ளது.இதற்கான உத்திரவுஇன்று 20/04/2017முதன்மை தொழிலாளர் ஆணையரால்CLC வெளியிடப்பட்டுள்ளது.திறனற்ற தொழிலாளிகளுக்கு
FOR UNSKILLED LABOUR
A பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.13/=ம்
B பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.11/=ம்
C பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.9/=ம்
விலைவாசிப்படி
01/04/2017 முதல் உயர்ந்துள்ளது.
தற்போதைய சம்பளம்
பிரிவு A நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.523
விலைவாசிப்படி - ரூ.13
மொத்தச்சம்பளம் - ரூ. 536
பிரிவு B நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.437
விலைவாசிப்படி - ரூ.11
மொத்தச்சம்பளம் - ரூ. 448
பிரிவு C நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.350/=
விலைவாசிப்படி - ரூ.9/=
மொத்தச்சம்பளம் - ரூ. 359/=
தற்போதைய விதிகளின்படி
ஒப்பந்த ஊழியர்களுக்கு
ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில்
மட்டுமே விலைவாசிப்படி வழங்கப்படும்.
புதிய சம்பளம் 19/01/2017ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் அவர்களுக்கு அன்றைய தேதியில் விலைவாசிப்படி உயர்வு இல்லை.
எனவே 19/01/2017 முதல் 31/03/2017 வரை அடிப்படைச்சம்பளம் மட்டுமே பொருந்தும்.
01/04/2017ல் இருந்ததுதான் விலைவாசிப்படி அமுலுக்கு வரும். ஆனால் மாநில நிர்வாகம் வழிமொழிந்த உத்திரவின் அடிப்படையில் சில இடங்களில் 19/01/2017 முதல் VDA சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தவறாகும். CLCயின் 17/03/2017
உத்திரவின்படி VDA 01/04/2017 முதல்
அமுலாகும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி மாவட்டத்தில் நிர்வாகத்திடம்
இதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததன் அடிப்படையில் மார்ச் மாத சம்பளம்
புதிய 350 ரூபாய் அடிப்படையிலே வழங்கப்பட்டது.
சில இணைய தளங்களும்
19/01/2017 முதல் VDA உயர்வு உண்டு
என தவறுதலாக குறிப்பிட்டிருந்தன.
எது எப்படியோ...
நிரந்தர ஊழியர்களுக்கு
விலைவாசிப்படி குறைந்தாலும்...
அன்றாடக்கூலிகளான ஒப்பந்த ஊழியர்களுக்கு விலைவாசிப்படி உயர்ந்துள்ளது
நமக்கு மிக்க மகிழ்ச்சியே…


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக