சனி, 24 ஜூன், 2017

நமது சம்மேளன உதவி தலைவர் தோழர். 

அசோக்ராஜானின் அருமையான  கருத்து 

முகநூலில்  இருந்து .......
Image may contain: 5 people, outdoor

பசுமை நினைவுகளை பரிமாறிக் கொள்வோம் :
* அன்று யாரோ ஒரு மதிவாணன் மீது கொலைப்பழி,காவல்துறை தேடுகிறது என்ற செய்தி வந்தபோது அது இந்த மதிவாணன்தான் என்று தேர்தல் நேரத்தைக்கூட பாராமல் மாநிலம் முழுதும் அவதூறு பரப்பி மகிழ்ந்தது.
* மாசில்லாத மாலியை "மானமிருந்தால் பதவியை ராஜினாமா செய்" என்ற மேதகு மேதாவியின் முழக்கம்.

* சம்மேளனச் செயலர் ஜெயராமனுக்கு "பனியன் வியாபாரி"என்று பட்டமளித்த குடந்தைக்குன்று.
மாநில மாநாட்டிலும் மாநாட்டிற்குப் பின்னும் திசை திருப்பலே இல்லாமல் பொங்கி வழிந்தோடும் ஒற்றுமை :
* பணி நிறைவு பெற்ற ஒரு தலைவருக்கு 'அல்வாவும்' இன்னொரு தலைவருக்கு 'ஆடம்பர விழாவும்' எடுத்து அசத்தியது.
* மேடையேறிய மதுரை சார்பாளரை அடியாள் இல்லாமல் தனியாளாக இடித்துத் தள்ளிய ஜாம்பவான்.
* சிறப்பு அழைப்பாளர் பதவிகளை ஒரு பக்கம் கிள்ளிக் கொடுத்து விட்டு மறு பக்கம் அள்ளிக் கொண்டு சென்றது.
* சேலம் செயற்குழுவிற்கு மாரி வந்தால் மாறி மாறி அடிப்போம் என மிரட்டல்.
* மாவட்டச் செயலர் மீதே நடவடிக்கை என வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம்.
* மாநிலக் கவுன்சில் உறுப்பினர்கள் அனைத்தும் எமக்கே என ஏப்பம் விட்டது.
எதிரிகளாக நடத்துவதுதான்
எதிர்காலக் கடமையோ.
எல்லைக்குள்ளேயே நடக்கும்
எல்லையில்லா போக்கு.
விடியலைத் தேடினாலும்
விடாது கருப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக